பிசிசிஐக்கு புதிய தலைவலி.. இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்.. இந்திய அணி வரலாற்றில் நடந்ததே இல்லை!
3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்துள்ளதால், 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
அண்மையாகலமாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திதுடன், ஆஸ்திரேலியா மண்ணில் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகின்றது.
இதன்போது, ரோஹித் சர்மாவுடன் பயிற்சியாளர் பும்ரா மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆலோசனை நடத்திய நிலையில், ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க மறுத்தார்.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயற்பட விருப்பத்துடன் உள்ளதாக தொடர்ச்சியாக பேசி வந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக ஆலோசனை இடம்பெற்றது.
அதில் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவதற்கு பிசிசிஐ நிர்வாகம் முடிவு எடுத்ததுடன், ரோஹித் சர்மா சாதாரண வீரராக விளையாடுவாரா என்று அவரிடம் கேட்டு உள்ளனர்.
இதனால், கடுப்பான ரோஹித் சர்மா, செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
எனினும், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறிய நிலையில், 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரோஹித் சர்மா இவ்வாறு கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான இந்திய அணிக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய தேவை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வரும் நிலையில், டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடரவுள்ளார். இதுவரை இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் 3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமனம் செய்ததே கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஒரு கேப்டன் என்று தான் செயல்பட்டுள்ளதுடன், தோனி மற்றும் கும்ப்ளே இருந்த போது இந்த நடைமுறை காணப்பட்டது.
எனினும், 3 கேப்டன்கள் என்பது வீரர்களுக்கு இடையில் சிறிய மனக்கசப்பை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயமாக அடுத்த கட்டமாக இந்திய அணியின் முழு பொறுப்பும் தனக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும்.
இதனால் விரைவில் ரோஹித் சர்மாவை ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதற்காக நடவடிக்கைக்கையை கம்பீர் மேற்கொள்ளாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.