இணையதளங்களில் லியோ படத்தை  வெளியிட தடை உத்தரவு

நாளை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இணையதளங்களில் லியோ படத்தை  வெளியிட தடை உத்தரவு

‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், லியோ படத்தை விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து 5-ஆவது படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நாளை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.

இதனால் ஏற்கனவே, தமிழக அரசு அரசாணை வெளியிட்ட படி, நாளை முதல் 25ம் தேதி வரை 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் நாளை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Click for more latest சினிமா news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர