சதமடித்த சுப்மன் கில்... கோலி, கவாஸ்கரை தொடர்ந்து அபாரம்.. பல்வேறு சாதனைகள் படைப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
சுப்மன் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதம், ஏழு அரை சதம் அடித்துள்ள நிலையில், இந்த ஐந்து சதங்களும் ஆசிய மைதானங்களில் அடிக்கப்பட்டவை.
அத்துடன், இங்கிலாந்தில் முன்னதாக வெறும் 6 இன்னிங்ஸில் விளையாடி மொத்தமாகவே 88 ரன்கள் தான் அடித்து இருந்த சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரிடம் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்த கில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
ஒரு நாள் கிரிக்கெட் போல் 56 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களுடைய பந்துவீச்சு திட்டத்தை மாற்றம் செய்து தற்காப்பு பில்டிங்கில் ஈடுபட்டதுடன், சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீசினர்.
எனினும், இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியை சமாளித்த கில், கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் ரன்களாக மாற்றினார். கேப்டனா விளையாடிய அவர், தன்னுடைய ஆறாவது சதத்தை 140 பந்துகளில் 14 பௌன்டரிகளுடன் விளாசினார்.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் சதத்தை அடித்த கில், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இன்னிங்சில் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்று இருக்கிறார்.
முன்னதாக, விஜய் ஹசாரே, கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் என்ற சாதனையை படைத்துள்ளதுடன், இங்கிலாந்து மண்ணில் இளம் வயதிலேயே சதம் அடித்த வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையை கில் படைத்திருக்கிறார்.