நான் மட்டும் விளையாடினால் போதாது.. நீங்களும் ரன்கள் சேர்க்க வேண்டும்.. கொந்தளித்த ரோஹித் சர்மா!

Key Points
  • இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன்,  கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. 
நான் மட்டும் விளையாடினால் போதாது.. நீங்களும் ரன்கள் சேர்க்க வேண்டும்.. கொந்தளித்த ரோஹித் சர்மா!

இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 241 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மா களத்தில் இருக்கும் போது எளிதாக வெற்றிபெறும் என்று பார்க்கப்பட்டாலும், ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பின்னர் சரியத் தொடங்கியது.

அடுத்தடுத்து 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி, இறுதியாக 208 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. 
ஏற்கெனவே முதல் ஒருநாள் போட்டியில் டை-யில் முடிவடைந்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. 

இதனையடுத்து,  இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன்,  கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. 

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், முதல் 10 ஓவர்களை மட்டும் பேசி பிரயோஜனமில்லை. கன்சிஸ்டண்டாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனை இந்திய அணி இன்று செய்யவில்லை.

இந்த தோல்வி நிச்சயம் மிகப்பெரிய ஏமாற்றம் தான். நம் முன் என்ன மாதிரியான பிட்ச் இருக்கிறதோ, அதற்கேற்ப தகவமைத்து கொண்டு விளையாட வேண்டும். 

நான் 64 ரன்கள் சேர்க்க முடிந்ததற்கு எனது பேட்டிங் ஸ்டைல் காரணம் என்று நினைக்கிறேன். நான் அப்படி பேட்டிங் செய்யும் போது, கொஞ்சம் ரிஸ்கும் இருக்கிறது. 

ஆனால் நான் நன்றாக பேட்டிங் செய்தால் போதாது.  இந்திய அணி தோல்வியடைந்தால் நிச்சயம் ஏமாற்றம் தான். எனது இன்டெண்டை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

மிடில் ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது எளிதல்ல. அதன் காரணமாகவே பவர் பிளேவில் எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ, அதனை சேர்க்க முயற்சிக்கிறோம்.

இன்றைய ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் எப்படி செயல்பட்டுள்ளோம் என்பது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google