IPL 2026: 19 சீசன்களிலும் களமிறங்கி வரலாறு படைத்த விராட் கோலி!
ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று தருணமாக மாறியது. விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கியதன் மூலம், உலகிலேயே 19 ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ந்து விளையாடிய முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையை படைத்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சின்னசாமி மைதானம் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்ந்தது.
2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் முதல் இன்று வரை ஒரே அணியான ஆர்சிபிக்காக மட்டுமே விளையாடி வரும் கோலி, நம்பிக்கைக்கும் நிலைத்தன்மைக்கும் சின்னமாக மாறியுள்ளார்.
தனது முதல் போட்டியையும் இதே மைதானத்தில் விளையாடிய அவர், 19 ஆண்டுகள் கழித்தும் அதே உற்சாகத்துடன் களத்தில் இறங்குவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக இத்தனை நீண்ட காலம் விளையாடிய வீரர் என்ற பெருமையும் அவருக்கே சொந்தம்.
புள்ளிவிவரங்களிலும் கோலி முன்னணியில் திகழ்கிறார். இதுவரை 267 போட்டிகளில் 8661 ரன்கள் குவித்து, ஐபிஎல் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக 2016 சீசனில் அவர் எடுத்த 973 ரன்கள் இன்னும் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
8 சதங்கள், 63 அரைசதங்கள் என பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ள அவர், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் திகழ்கிறார்.
2025-ல் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர், 19-வது சீசனிலும் அதே ஆட்ட வேகத்தைத் தொடரும் நோக்கத்தில் கோலி களமிறங்கியுள்ளார். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்தாலும், ஐபிஎல் வந்துவிட்டால் ஆர்சிபி ரசிகர்களின் ‘கிங்’ ஆகவே அவர் திகழ்கிறார்.
தொடர்ந்து தனது உடற்தகுதியையும் ஆட்டத்தையும் பராமரித்து வருவது தான் இந்த நீண்ட பயணத்தின் ரகசியம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
