பிரைட்டன் கடற்கரையில் 3 பெண்களின் சடலங்கள் மீட்பு: அதிர்ச்சியில் பிரித்தானியா

பிரைட்டன் கடற்கரையில் 3 பெண்களின் சடலங்கள் மீட்பு: அதிர்ச்சியில் பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரை நகரமான Brighton பகுதியில் மூன்று பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில கால்வாய் கடற்பகுதியில் மூன்று பெண்கள் ஆபத்தில் இருப்பதாக புதன்கிழமை அதிகாலை சுமார் 5.45 மணியளவில் அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து Sussex Police தலைமையில் மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேடுதல் பணிக்காக பல ரோந்து வாகனங்கள், மீட்பு குழுக்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் களமிறக்கப்பட்டன. பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, தேடப்பட்ட மூன்று பெண்களும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்களின் உடல்கள் Madeira Drive அருகே கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் அடையாளத்தை கண்டறியும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம், அவர்கள் கடலில் தவறி மூழ்கியார்களா அல்லது இந்த சம்பவத்தில் குற்றச்செயல் ஏதேனும் தொடர்புடையதா என்ற கோணங்களிலும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.