டி20 கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்திய அணி

Key Points
  • தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
  • இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
டி20 கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. 

அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர். 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சதம் அடித்த திலக் வர்மாவையும் சேர்த்து இந்தியா தரப்பில் இந்த வருடம் மட்டும் 5 வீரர்கள் சதமடித்துள்ளனர். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சதங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. 

இதற்கு முன் 2016-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2023-ம் ஆண்டு இந்தியாவும் தலா 5 சதங்கள் அடித்துள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியா இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google