மஞ்சள் ஜெர்சி அணிக்கு கேப்டன் ஆன சுரேஷ் ரெய்னா.... போட்டிகள் விபரம் இதோ!

விவிஐபி உத்திர பிரதேச அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை, முக்கிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனக் கூறினார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
மஞ்சள் ஜெர்சி அணிக்கு கேப்டன் ஆன சுரேஷ் ரெய்னா.... போட்டிகள் விபரம் இதோ!

பிப்ரவரி 23 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை  மூத்த வீரர்களுக்கான ஐபிஎல் தொடர், நடைபெறவுள்ளது. இதில், விவிஐபி உத்திரபிரதேச அணிக்கு, சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், அந்த அணி மஞ்சள் ஜெர்சி அணிந்துதான் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ''மூத்த வீரர்களுக்கான ஐபிஎல் தொடரில் பங்பேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 

விவிஐபி உத்திர பிரதேச அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை, முக்கிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனக் கூறினார்.

சுரேஷ் ரெய்னா அணியில், ராஜத் பாடியா, டேன் கிறிஸ்டியன் போன்ற மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது, டேரடூனில் உள்ள ராஜிங் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில், விளையாடி வருகிறார்கள்.

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல்... அகார்கர் செய்த வேலை... இதுதான் காரணம்!

இத்தொடரை, இந்திய வீரர்களுக்கான கிரிக்கெட் வாரியம் ஒருங்கிணைப்பு செய்கிறது. முன்னாள் வீரர் பிரவின் தியாகி, இத்தொடருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொரில் விவிஐபி உத்திரபிரதேசம், ராஜஸ்தான் லெஜண்ட்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, சத்தீஸ்கர் வாரியர்ஸ், தெலுங்கானா டைகர்ஸ், மும்பை சாம்பியன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.

மும்பை சாம்பியன்ஸ் அணிக்கு விரேந்தர் சேவாக் கேப்டனாக செயல்பட உள்ளார். தெலுங்கானா டைகர்ஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் கேப்டனாக இருக்கிறார். ரெட் கார்பெட் டெல்லி அணிக்கு, கிப்ஸ் கேப்டனாக விளையாட உள்ளார்.

 ''மூத்த வீரர்களுக்கான இந்த ஐபிஎல் தொடர், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும். ஐபிஎலுக்கு நிகராக இருக்கும். சுரேஷ் ரெய்னா, இத்தொடரில் கேப்டன் வீரராக விளையாட உள்ளார். அவரை காண, ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்'' எனக் ஒருங்கிணைப்பாளர் பரவீன் தியாகி பேசியபோது கூறினார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.