திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல்... அகார்கர் செய்த வேலை... இதுதான் காரணம்!

Key Points
  • அவரை அணியில் இருந்து நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், கே.எல்.ராகுலை திட்டமிட்டே புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல்... அகார்கர் செய்த வேலை... இதுதான் காரணம்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற கே.எல்.ராகுலுக்கு கையில் தசைபிடிப்பு ஏற்பட்டது. பாதிப்பு மிகவும் குறைவு என்றாலும், அவரை உடனே பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் கே.எல்.ராகுல் பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி இருந்த நிலையில், திடீரென்று 'பயிற்சி செய்யும்' புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கே.எல்.ராகுல் பதிவு செய்தார். 

இதனால், கே.எல்.ராகுல் நிச்சயம் விளையாடுவார் என ரசிகர்கள் நினைத்த நினையில், அப்படி நடக்கவில்லை. பயிற்சி செய்யும் புகைப்படத்தை கே.எல்.ராகுல் பதிவிட்ட சில மணி நேரத்தில், மூன்றாவது டெஸ்டில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார், அவருக்கு மாற்றாக தேவ்தத் படிக்கல் இடம்பெறுவார் என பிசிசிஐ அறிவித்தது.

அவரை அணியில் இருந்து நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், கே.எல்.ராகுலை திட்டமிட்டே புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராகுலின் பேட்டிங் செயல்பாட்டதில் திருப்தி இல்லாமல், அகார்கர் இதனை செய்யவில்லையாம். சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றப் பிறகுதான், அகார்கர் ராகுலை நீக்கினாராம்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு, கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை அஜித் அகார்கர் நேரில் பார்த்து ரசித்தாராம். அப்போது, தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி 151 ரன்களை குவித்தது, அகார்கரை கவர்ந்துவிட்டதாம்.

தேவ்தத் படிக்கல், ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் முதல் போட்டியில், பஞ்சாப்புக்கு எதிராக 193 ரன்களையும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களையும் அடித்தார். 

மேலும், இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் இடம்பெற்று 105, 65, 21 என ரன்களை தேவ்தத் படிக்கல் குவித்தார். இதனால்தான், மூன்றாவது போட்டியிலேயே கே.எல்.ராகுலுக்கு பதிலாக படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளாராம்.

தனக்கு மாற்றாக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்படுவார் எனத் தெரிந்ததும்தான், அதிருப்தியில் இருந்த கே.எல்.ராகுல், தான் பயிற்சி செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினாராம். 

ஆனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான், படிக்கல்லை உடன அணிக்குகள் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடும் அதிருப்தியில் இருக்கும் கே.எல்.ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிசிசிஐ நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google