பரப்பரப்பான இறுதி ஆட்டத்தில் 2ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்
பரபரப்பான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியானது, 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை தனதாக்கி உள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி, மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் மோதின.
4ஆவது முறையாக கால்பந்து கோப்பையை வெல்லும் எதிர்பார்ப்பில் அர்ஜென்டினாவும், 2ஆவது முறையாக உலகக் கோப்பையை வெற்றிக்கொள்ளும் இலக்குடன் ஸ்பெயினும் இந்தப் போட்டியில் களமிறங்கின.
போட்டியின் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாத நிலையில், 2ஆவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறி இருந்தன.
இந்த நிலையில், 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்ததுடன், கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை வழங்கி வெளியேற்றப்பட்டார்.
இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாடியதுடன், ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றதுடன், இதன்போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.
அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்ததுடன், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.