ஐசிசியின் செப்டெம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் - வீராங்கனையாக சாமரி தெரிவு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்து வருகிறது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ஐசிசியின் செப்டெம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் - வீராங்கனையாக சாமரி தெரிவு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்து வருகிறது. 

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்து இருந்தது.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வீரர்களான ஷுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அதில் சிராஜ் மற்றும் மலானை பின்னுக்கு தள்ளி செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஷுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க்கும், இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்தும் இடம் பெற்றிருந்தனர். 

இதில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர