இளம் வீரரை தனியாக அழைத்து ரோஹித் சர்மா பேச்சு.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு உறுதியானது!

அதிரடி பேட்டிங் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் யாரும் இதுவரை இந்திய அணியில் கிடைக்காத நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இளம் வீரரை தனியாக அழைத்து ரோஹித் சர்மா பேச்சு.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு உறுதியானது!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஆடிய சிவம் துபேவின் சிறப்பான ஆட்டம் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலத்துக்கு ஆப்பு வைத்துள்ளதாக பரவலாக பேச்சப்பட்டு வருகின்றது.

ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி பேட்டிங் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் யாரும் இதுவரை இந்திய அணியில் கிடைக்காத நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அவர் வருங்கால இந்திய டி20 அணியின் கேப்டனாக பார்க்கப்படுவதுடன்,  மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மா அவருக்கு போட்டியாக சிவம் துபேவை அணியில் சேர்த்து வளர்க்கத் ஆரம்பித்து விட்டதாக பேச்சு கிளம்பி உள்ளது.

முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கும் முக்கியமான நான்காம் வரிசையில் ஆல் - ரவுண்டர் சிவம் துபேவை களமிறக்கினார் ரோஹித் சர்மா. 

தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிவம், 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

டி20 வரலாற்றிலேயே ரோஹித் சர்மா படைத்த மாபெரும் சாதனை...மெகா மைல்கல்!

அத்துடன் வேகப் பந்துவீச்சில் 2 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் என்பதை சிவம் துபே நிரூபித்து இருக்கிறார்.

சிவம் துபேவின் இந்த நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்துக்கு பின் மைதானத்திலேயே அவரை அழைத்து பேசிய ரோஹித் சர்மா, அடுத்து வரும் போட்டிகளில் எப்படி செயல்படுவது என நாம் தொடர்ந்து பேசுவோம் என அவர் கூறியதாக சிவம் துபே பின்னர் கருத்து வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து, தற்காலிகமாக அணிக்கு வந்த வீரர் சிவம் துபே என ரோஹித் நினைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்து 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளார்.

ஆனால், அதற்குள் அவருக்கு மாற்றாக சிவம் துபேவை உருவாக்குவதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கல் ஏற்படுவதுடன், மாற்று வீரராகவாவது 2024 டி20 உலகக்கோப்பை அணியில் சிவம் துபே இடம் பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர