பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி: வெளியான தகவல்

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி: வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இதனையடுத்து, ஐசிசியின் தலைவராக டிசம்பர் மாதம் ஜெய்ஷா பொறுப்பேறுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் எதிரொலித்தன.

இந்த நிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோகன் ஜெட்லி, பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர