மத்திய கிழக்கு போர்: இலங்கையின் 205 விமான சேவைகள் ரத்து - பயணிகளுக்கு விசா சலுகை மற்றும் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக விளக்கமளித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர்: இலங்கையின் 205 விமான சேவைகள் ரத்து - பயணிகளுக்கு விசா சலுகை மற்றும் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக விளக்கமளித்துள்ளார். அவரது தகவல்படி, இதுவரை இலங்கைக்கு வரவிருந்த 107 விமானங்கள் மற்றும் புறப்படவிருந்த 98 விமானங்கள் என மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில், அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுமைக்கும் விசா வசதிகளை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்குள்ளான பயணிகள், எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி தங்களது டிக்கெட் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேறு ஒரு பயணத் திகதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு கருதி ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்கள் மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதால், அவற்றுக்கு அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, நிலைமை சீரடையும் வரை விமானங்கள் எடுத்துச் செல்லும் பொதிகளின் (Luggage) அளவைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.