நாடுகடத்தப்பட்ட ஈரானிய புலம்பெயர்ந்த நபர் ஒரே மாதத்தில் பிரித்தானியாவுக்குள் மீண்டும் நுழைந்தார்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
நாடுகடத்தப்பட்ட ஈரானிய புலம்பெயர்ந்த நபர் ஒரே மாதத்தில் பிரித்தானியாவுக்குள் மீண்டும் நுழைந்தார்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.

சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களை மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக, பிரித்தானியாவும் பிரான்சும் "One in, one out திட்டம்" என்னும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 40 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த அந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர், செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி பிரான்சுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, சிறுபடகு ஒன்றின்மூலம் அவர் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.

மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததற்கான காரணமாக அவர் தெரிவித்ததாவது: பிரான்சில் ஆட்கடத்தல்காரர்கள் தன்னை அடிமையாக நடத்தியதாகவும், தன்னை துப்பாக்கியைக் காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் கூறினார். ஆகவே, உயிருக்கு பயந்துதான் தான் மீண்டும் பிரித்தானியாவுக்கே ஓடி வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்று உள்துறை அலுவலகம் (Home Office) தெரிவித்துள்ளது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர