3-வது வரிசையில் யார் விளையாடுவார்? இந்திய அணி பயிற்சியாளர் தகவல்
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 3-வது பேட்டிங் வரிசையில் தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் விளையா...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி சண்டிகரில் இன்று (ஜூன் 6) தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 3-வது பேட்டிங் வரிசையில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் வெளிப்படையான தகவலைத் தெரிவித்துள்ளார்.
செஸ்வர் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 3-வது பேட்டிங் வரிசை பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இது நீண்டகாலத்திற்கு நல்லதல்ல. எனவே, இந்த முக்கியமான இடத்தில் ஒரு நிலையான வீரரைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்று உதவிப் பயிற்சியாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் 3-வது வரிசையில் தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் களமிறங்குவார் என்று ரையான் டென் டஸ்சாட் உறுதிப்படுத்தியுள்ளார். "யார் விளையாடினாலும், அவர்கள் அதிக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என்று அவர் கூறினார்.
