மூன்று நிபந்தனை... அதிர்ச்சியில் மும்பை அணி... ரோஹித்தை வாங்க 2 அணிகள் போட்டி!

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மூன்று நிபந்தனை... அதிர்ச்சியில் மும்பை அணி... ரோஹித்தை வாங்க 2 அணிகள் போட்டி!

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெகா ஏலத்தில், ரோஹித் சர்மா கலந்துகொள்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

கடந்த சீசனில், ஹர்திக் பாண்டியாவை ட்ரேடிங் மூலம் குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து வாங்கி, மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டனாக நியமித்த பின்னர், மும்பை அணியில் தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வருகின்றது.

ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த பின்னர் இதுவரை அவருக்கு ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா போன்ற யாரும் வாழ்த்துகூட சொல்லவில்லை.

மேலும், களத்தில் ரோஹித் சர்மாவை பவுண்டரி லைனில் பீல்டிங் நிற்க வைத்தது, அவரை அங்கும் இங்கும் பீல்டிங்கிற்காக ஓடவிட்டது, போன்ற சம்பவங்களும், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை அணியில் இருந்து விலகும் முடிவை ரோஹித் சர்மா தெரிவித்துவிட்ட நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மும்பை நிர்வாகம் இறங்கி இருக்கின்றது.

ரோஹித், பும்ரா, சூர்யகுமார், ஹர்திக் என நான்கு இந்திய வீரர்களை தக்கவைப்பது அல்லது ஆர்டிஎம் கார்ட் என்றால், அதன் மூலம் ரோஹித்தை தக்கவைப்பது என்ற முடிவில் மும்பை நிர்வாகம் உள்ளதாம்.

ஆனால், மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகும் முடிவில் ரோஹித் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, மும்பை அணியில் நீடிப்பேன் எனவும் ரோஹித் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 15+ கோடி மதிப்பில் தக்கவைக்க வேண்டும். கேப்டன் பதவியை சூர்யகுமார் யாதவுக்கு கொடுக்க வேண்டும், என்னை இம்பாக்ட் சப்பாக களமிறக்க கூடாது என மூன்று அதிரடி கோரிக்கைகளை மும்பை நிர்வாகத்திற்கு ரோஹித் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இம்பாக்ட் சப் ஆக களமிறக்காமல், ரெகுலராக விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும், மும்பை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அணியில் நீடிப்பேன் என ரோஹித் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கேப்டன்ஸி இடத்திற்கு ரோஹித் சர்மாவை வாங்க 30 கோடி வரை டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google