அஸ்வினுக்கு மாற்றாக வரும் வீரர் இவர்தான்.. தமிழக வீரர் இல்லை... ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் அனுப்ப தீர்மானம்?

ஐபிஎல் 18ஆவது சீசனில் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

அஸ்வினுக்கு மாற்றாக வரும் வீரர் இவர்தான்.. தமிழக வீரர் இல்லை... ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் அனுப்ப தீர்மானம்?

ஐபிஎல் 18ஆவது சீசனில் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

சிஎஸ்கே அணியால், 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாத நிலையில், கடைசி சில போட்டிகளை பார்க்க, ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. 19ஆவது சீசனிலும் சிஎஸ்கே இப்படி சொதப்பினால், ஸ்டார் அணி என்ற அந்தஸ்தை கூட இழந்துவிடலாம்.

இந்த நிலையில், ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி கம்பேக்கை கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பலமிக்கதாக கட்டமைக்கும் வேலையை, தற்போது இருந்தே ஆரம்பித்துள்ளது. 

ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தரை கொண்டுவரும் முயற்சியில் சிஎஸ்கே இருந்தது.

குஜராத் டைடன்ஸ் அணியிலும் வாஷிங்டன் சுந்தருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.  இருந்தும் சுந்தரை விட்டுக்கொடுக்க முடியாது. அவர் எங்களது எதிர்கால திட்டங்களில் இருக்கிறார் எனக் கூறி, சிஎஸ்கேவுக்கு விட்டுக்கொடுக்க மறத்துவிட்டனர்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக, 30 வயதாகும் தீபக் ஹூடாவை விளையாட வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்து உள்ளனது.

ரஞ்சிக் கோப்பை 2025 தொடரில் அவர் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டார். மூன்று போட்டிகளிலேயே ஒரு இரட்டை சதம், ஒரு சதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார். 

தற்போது, பேட்டிங்கில் நல்ல மாற்றங்களை செய்து, தற்போது அபாரமான பார்மில் இருக்கிறார். இதனால், ஹூடாவை வெளியேற்றாமல் தக்கவைத்து, சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக விளையாட வைக்க சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை, மினி ஏலத்தில், தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை வாங்கினால், ஹூடாவை பேக்கப் ஆப்ஷனாக பயன்படுத்துவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனின் நடுப்பகுதியில் வாங்கிய ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோரை, சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் சேர்த்து, நீண்ட காலத்திற்கு விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சிஎஸ்கே 15 கோடி தொகையை வைத்து தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர், தரமான மிடில் வரிசை பேட்டரை வாங்கியாக வேண்டும். 

மேலும், டிரேடிங்கில் சஞ்சு சாம்சனை வாங்கி, ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் அனுப்பவும் சிஎஸ்கே முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.