ரோகித் பெரிய தப்பு பண்ணி விட்டார்... அதுதான் இந்தியாவுக்கு  பின்னடைவா போச்சு... சேவாக் குற்றச்சாட்டு!

பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச மேக்ஸ்வெல் வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ரோகித் பெரிய தப்பு பண்ணி விட்டார்... அதுதான் இந்தியாவுக்கு  பின்னடைவா போச்சு... சேவாக் குற்றச்சாட்டு!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைய ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி  உலகக் கோப்பையை கைப்பற்றியது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக பவுண்டரி சிக்ஸர்கள் குவித்தார். இதனால் ரன்கள் வேகமாக வந்து கொண்டே இருந்தது.

பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச மேக்ஸ்வெல் வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.

அத்தோடு அந்த ஓவரை விடாமல் அதற்கு அடுத்த பந்தினை இறங்கி வந்து அடிக்க முயல, அந்தப் பந்து எட்ஜ் எடுத்து காற்றில் பறந்து செல்ல, அதை ஓடிச் சென்று அபாரமான முறையில் டிராவீஸ் ஹெட் பிடித்தார்.

இந்த இடத்தில் இருந்துதான் இந்தியா அணியின் ஆட்டம் அப்படியே மாறியதுடன், அடுத்து வந்த ஸ்ரேயா 11 வது ஓவரில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவராலும் பௌண்டரியை தொட முடியவில்லை.

இந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அந்த இடத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று 
ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். 

இப்போது, ஷேவாக்கும் இதே கருத்தை வெளியிட்டு உள்ளார், இது குறித்து ஷேவாக் கூறும் பொழுது “ரோஹித் சர்மா ஏமாற்றம் அடையலாம் இல்லை ஏமாறாமல் இருக்கலாம் ஆனால் அணி நிர்வாகம் நிச்சயம் ஏமாற்றமடைந்திருக்கும். அவர் ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரி அடித்த பிறகு அந்த நேரத்தில் அப்படி ஒரு ஷாட் விளையாடி இருக்கக் கூடாது என்று பயிற்சியாளர்கள் அவரிடம் கூறுவார்கள்.

ஆனால் ரோகித் பவர் பிளேவின் மேக்ஸ்வெல் கடைசி ஓவரை சுலபமாக விட்டு விட விரும்பவில்லை. அவரை தொடர்ச்சியாக தாக்க அவர் நினைத்தார். ஆனால் அது ஒரு மோசமான ஷாட். மீண்டும் ஒரு வாய்ப்பு அப்படி கிடைக்கும் என்றால் அப்படி நடக்காது. சூழ்நிலைகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஆனால் ரோகித் ஆட்டம் இழந்ததும் அந்த விக்கெட் வேறு மாதிரியான விக்கெட்டாக தெரிந்தது. யாராலும் அங்கு ஷாட் அடிக்க முடியவில்லை” என்று கூறி உள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர