சீனிவாசன் இருந்திருந்தால் தோனி இப்படி ஒதுங்கியிருப்பாரா? – சிஎஸ்கே டிரஸிங் ரூம் சூழல் குறித்து அஸ்வின் கேள்வி

ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே டிரஸிங் ரூமில் தோனி இல்லாதது குறித்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். என்.சீனிவாசன் இருந்திருந்தால் தோனி இப்படி ஒதுங்கியிருப்பாரா என மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
சீனிவாசன் இருந்திருந்தால் தோனி இப்படி ஒதுங்கியிருப்பாரா? – சிஎஸ்கே டிரஸிங் ரூம் சூழல் குறித்து அஸ்வின் கேள்வி

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸிங் ரூமில் தோனியின் அனுசரணை முற்றிலும் இல்லாதது குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் மனம் திறந்துள்ளார். அணியின் முன்னாள் நிர்வாகத் தலைவர் என்.சீனிவாசன் செல்வாக்கு இருந்த காலத்துடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டு, தோனியின் இந்த மாற்றம் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கும்போதே காலில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக தோனி முதல் அரைச் சீசனில் விளையாடவில்லை. வெளியூர் போட்டிகளுக்கு அவர் பயணிக்காதது மட்டுமின்றி, சொந்த மைதானமான சென்னையிலும் அவர் மைதானத்துக்கு வருவதைத் தவிர்த்தார். தன்மீது கவனம் திரும்ப வேண்டாம் என அவர் விரும்பியதாக அணி நிர்வாகம் அப்போது விளக்கம் அளித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான சென்னைப் போட்டியில் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெருவிரல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டது. அன்றைய தினம் அவர் மைதானத்தில் இருந்தாலும், அணியினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, ஆட்ட முடிவில் மைதானத்தைச் சுற்றிவிட்டுச் சென்றதோடு சரி, மற்றபடி முழுமையாக ஒதுங்கியே இருந்தார்.

தனது யூடியூப் சேனலில் அஸ்வின் இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ளார். “எம்.எஸ். தோனி இவ்வளவு ஆண்டுகளாக அந்த டிரஸிங் ரூமின் ஓர் அங்கமாகவே இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் அங்கே இருப்பார். அவர் விளையாடவில்லை என்றாலும்கூட, மைதானத்துக்கு வரலாம். ஆனால், ஏன் ஒருமுறைகூட மைதானத்துக்கு வரவில்லை என்று என் மனம் கேள்வி கேட்கிறது.

நெட் பயிற்சியில் மட்டுமே அவரைப் பார்த்தோம்,” என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். தோனியே, “நான் வந்தால் கவனம் முழுவதும் என் மீது திரும்பும், அது அணிக்கு இடையூறாக இருக்கும்” என்று கருதியிருக்கலாம் எனினும், இதனால் ரசிகர்களின் அனுபவம் பறிபோவதாக அஸ்வின் கவலை தெரிவித்தார்.

அஸ்வினின் கூரிய கேள்வி, சிஎஸ்கேவின் ஆதிக்கத் தலைவராக இருந்த என்.சீனிவாசனை மையப்படுத்தியது. சமீபத்திய ஒரு கொண்டாட்டத்தின்போது தோனி எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அஸ்வின், “சிரித்த முகமோ, எந்த ஈடுபாடோ இல்லை. அவரது மனைவி சாக்ஷி அங்கே இருந்தார்; அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டதாக நினைக்கிறேன். அப்போது எனக்குக் கவலை ஏற்பட்டது.

இன்றும் என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது: சிஎஸ்கேவின் நிர்வாக இயக்குநராக என்.சீனிவாசன் இருந்திருந்தால், தோனி மைதானத்துக்கு வராமல் இருந்திருப்பாரா?” என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். தோனியின் எதிர்காலம் குறித்து ஊகிப்பது நியாயமற்றது என்றாலும், அவர் விளையாடுவதை நிறுத்தினாலும் அவரது வழிகாட்டுதலும் ஆலோசனையும் இளம் வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்பதால், அவர் டிரஸிங் ரூமில் தொடர்ந்து இருப்பதே அணிக்கு நன்மை பயக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்தார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர