தீபாவளிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏழைகளுக்காக செய்த உதவி நெகிழ்ச்சி சம்பவம்

பலம் வாய்ந்த பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பிறகு இரண்டாவது பலம் வாய்ந்த ஆசிய அணி என்ற பெருமையை தற்போது ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
தீபாவளிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏழைகளுக்காக செய்த உதவி நெகிழ்ச்சி சம்பவம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் குன்றிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலம் வாய்ந்த பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பிறகு இரண்டாவது பலம் வாய்ந்த ஆசிய அணி என்ற பெருமையை தற்போது ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது.

இந்தியாவின் கிரிக்கெட் மைதானங்களை ஆப்கானிஸ்தான் பயன்படுத்தி பயிற்சிகளை பெற்று வந்தது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பல உதவிகளை செய்திருக்கிறது.

இந்த நிலையில் தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஏழைகளுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் பணம் வழங்கி உதவி செய்திருக்கிறார்.

அவர்களுக்காக காரிலிருந்து இறங்கி குர்பாஸ் உதவி செய்திருக்கிறார். இதனை அந்த வழியாக சென்ற ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குர்பாசை கொண்டாடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களே, கிரிக்கெட்டை நம்பி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற வீரர்கள் போல் வருமானம் எல்லாம் கிடைக்காது. ஆனால் தங்களிடம் இருந்த காசை ஏழை மக்களுக்கு கொடுத்து தீபாவளி கொண்டாட உதவிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர