தமிழக வீரருடன் மோதும் மூன்று வீரர்கள்.. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் மூன்றாம் மற்றும் இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. 

தமிழக வீரருடன் மோதும் மூன்று வீரர்கள்.. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் மூன்றாம் மற்றும் இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. 

இதில் சாய் சுதர்சனுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் விளையாடப் போவதும் நான்காம் வரிசையில் சுப்மன் கில் விளையாடப் போவதும் உறுதியாக உள்ளது.

ஐந்தாம் இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடவுள்ள நிலையில், மூன்றாம் வரிசை மற்றும் ஆறாம் வரிசைக்கான வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. 

இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் இந்தியாவுக்கு வந்த நிலையில், அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து சென்று விடுவார். 

இந்த நிலையில், பேட்டிங் வரிசையை முடிவு செய்வதில் தாமதமாகி இருக்கிறது. மூன்றாம் வரிசையில் அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்சன் ஆகிய இருவரில் யாரை களமிறங்குவது என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஆறாவது வரிசையில் கருண் நாயர் அல்லது துருவ் ஜூரல் ஆகிய இருவரில் யாருக்கு இடம் என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சாய் சுதர்சன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் விளையாடவில்லை என்பதுடன், இந்தியா மற்றும் இந்தியா 'ஏ' அணிகள் மோதிய பயிற்சிப் போட்டியில் மட்டுமே விளையாடினார். 

அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் மூன்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடி ரன் குவித்த நிலையில், மூவருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

முதல் நான்கு வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய திறமைகொண்ட கருண் நாயரை ஆறாவது வரிசையில் களமிறக்கினால் அது இந்திய அணிக்கு பலன் அளிக்குமா என்ற கேள்வியும் உள்ளது. 

அத்துடன், மூன்றாம் வரிசை அல்லது துவக்க வீரராக விளையாடக்கூடிய அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் துருவ் ஜூரல் வரிசையாக அரை சதங்களை அடித்தார். அவர் மாற்று விக்கெட் கீப்பராக இருந்தாலும் பேட்ஸ்மனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 

எனவே, அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது சிறப்பாக இருந்தாலும், இந்த நான்கு பேரில் இரண்டு பேருக்கு தான் வாய்ப்பு அளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ளது.