அஸ்வின்தான் இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டியவர்.. கவாஸ்கரால் வெடித்த சர்ச்சை!

Key Points
  • இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.
அஸ்வின்தான் இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டியவர்.. கவாஸ்கரால் வெடித்த சர்ச்சை!

இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

உலகின் சிறந்த டெஸ்ட் சுழற் பந்துவீச்சாளரான இந்திய அணி வீரர் அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்த நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அஸ்வின்தான் இந்திய அணியின் கேப்டனாக ஆகி இருக்க வேண்டியவர் என்று கவாஸ்கர் கூறி உள்ளார்.

"அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். அதற்கு எனது வாழ்த்துகள். அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். எப்போதும் புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றை முயற்சிக்கத் தயாராக இருக்கிறார்" என்று பாராட்டி இருந்தார்.

சைலண்டாக விராட் கோலி, கிறிஸ் கெய்ல் சாதனைக்கு ஆப்பு வைத்து டாப்புக்கு சென்ற பாபர் அசாம்!

மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் விளையாடியபோது,​​ அஸ்வினுக்கு இந்திய கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.

2021இல் இந்திய டெஸ்ட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றதுடன், அதே சமயத்தில் ஒருநாள் தொடரில் பங்கேற்க மற்றொரு அணி இலங்கை சென்றது.

இதற்கு காரணம், அப்போது லாக்டவுன் விதிமுறைகள் இருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை அனுப்பியது பிசிசிஐ. 

அப்போது டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கை வைகப்பட்ட நிலையில்,  அது நடக்கவில்லை. 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google