குப்பைத் தொட்டியில் கிடந்த கோடிக்கணக்கான வெளிநாட்டு பணம்... பகீர் சம்பவம்!

குப்பை தொட்டியில் குப்பைக்கு பதிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
குப்பைத் தொட்டியில் கிடந்த கோடிக்கணக்கான வெளிநாட்டு பணம்... பகீர் சம்பவம்!

குப்பை தொட்டியில் குப்பைக்கு பதிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (3) ரயில் பாதையில் அருகே இருந்த குப்பை தொட்டியில் ஒரு மூட்டை கிடந்தது. அப்போது, அங்கு வேலை செய்த ஒருவர், அந்த மூட்டையை திறந்த பார்த்தார். 

அதில், 3 மில்லியன் அமெரிக்க டொலர் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். பின்னர், பொலிஸார் பணத்தை கைப்பற்றி ஆர்பிஐக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், "ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக அமெரிக்க டொலர் கண்டுடெடுக்கப்பட்டது. முதலில் இதை போலியான நோட்டுகள் என்று நினைத்தோம். பின்னர், இதை ஆர்பிஐ ஆய்வு செய்து கூறுவதாக தெரிவித்தது. குப்பை தொட்டியில் கைப்பற்றப்பட்ட 3  மில்லியன் அமெரிக்க டாலர்கள் போலியானதா? இல்லை உண்மையான நோட்டுகளா என்பதை விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.  

இவ்வாறு குப்பை தொட்டியில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான டாலர் நோட்டுள் கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர