டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்.. ஐசிசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்.. ஐசிசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

முன்னதாக உசைன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் தூதர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மூன்றாவது தூதராக உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

2024 டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 36 நாட்களில் துவங்க உள்ளதுடன், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. 

டி20 உலகக்கோப்பையை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப் பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட்டை தூதராக அறிவித்தது. 

அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டார். 

தொடர்ந்து அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்தியாவின் சார்பில் யுவராஜ் சிங் தூதராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

2007இல் டி20 உலகக்கோப்பை நடந்த போது யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார். 

இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், "ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது உள்ளிட்ட, டி20 உலகக்கோப்பை ஆடியதில் இருந்து எனக்கு சில சிறந்த நினைவுகள் கிடைத்தன.  இந்த உலகக்கோப்பை தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இந்த ஆண்டின் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்றும், யுவராஜ் சிங் கூறி இருக்கிறார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர