ஓரம்கட்டப்பட்ட அஸ்வின்... ரோஹித் சர்மா, கம்பீர் அதிரடி தீர்மானம்... காரணம் என்ன?

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஓரம்கட்டப்பட்ட அஸ்வின்... ரோஹித் சர்மா, கம்பீர் அதிரடி தீர்மானம்... காரணம் என்ன?

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 ஸ்பின்னர்கள் அணியில் இருக்கும் போது, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன் என்று இது தொடர்பில் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். 

ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்காக நம்பர் 3 வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 269 பந்துகளில் ஒரு சிக்ஸ், 19 பவுண்டரி உட்பட 152 ரன்களை விளாசியதுடன், முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அத்துடன், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், இந்திய அணி டெஸ்ட் அணியில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

இருந்தாலும் இந்திய அணியில் ஏற்கெனவே 4 ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில், 5வது ஸ்பின்னரின் தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அஸ்வினுக்கு ரோஹித் சர்மா வாய்ப்பு அளிக்கவில்லை. 

இந்த நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்க ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்காக கடைசி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி இருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரை தயார் செய்யும் வகையில் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளாரா என்ற விவாதம் இடம்பெற்று வருகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.