அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற ராணுவ வளங்கள் தொடர்பான உளவு தகவல்களும் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.