ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் நிலவிய கடும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.