“எதையும் மாற்றமாட்டோம், கம்பேக் கொடுப்போம்” – தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் அதிரடி

இந்திய அணியின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியிருந்தது என்றும், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் சூர்யகுமார் தெரிவித்தார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
“எதையும் மாற்றமாட்டோம், கம்பேக் கொடுப்போம்” – தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் அதிரடி

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியின் செயல்பாடு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.

முதலில் பந்துவீச்சில் அணி நன்றாகத் தொடங்கியதாகவும், ஆனால் மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்கா சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் அவர் கூறினார். 

இந்திய அணியின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியிருந்தது என்றும், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் சூர்யகுமார் தெரிவித்தார்.

பந்துவீச்சில் ஆர்திப்சிங் மற்றும்  பும்ரா இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.

அடுத்தப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் முன்னேற்றம் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்ட அவர், அணியின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்தார். 

“எங்களின் ஸ்டைலில் அப்படியே ஆடப் போகிறோம். அடுத்த போட்டியில் நிச்சயமாக கம்பேக் கொடுப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று அவர் உறுதியாக கூறினார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர