இரண்டாவது டெஸ்டிலாவது இந்த வீரரை நீக்கிவிட்டு, இந்த பந்துவீச்சாளரை அணிக்கு கொண்டு வாருங்கள்... கவாஸ்கர் அதிரடி
முதல் இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் கொடுத்ததுடன், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே பெற்று இருந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய சூழலில் முதல் டெஸ்டில் விளையாடிய சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய வீரர்களை அணியில் சேர்க்குமாறு பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
பும்ரா உடல் தகுதியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், குல்தீப் யாதவை அணியில் தயவு செய்து அணிக்கு கொண்டு வாருங்கள். சர்துல் தாக்கூருக்கு பதிலாக அவர் அணியில் இடம்பெற வேண்டும். பர்மிங்காம் மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவும். அந்த ஆடுகளத்தில் லெக் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் கொடுத்ததுடன், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே பெற்று இருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் பென் டக்கட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வீழ்த்தி இருந்தாலும், சர்துல் தாக்கூர் பேட்டிங் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அத்துடன், இந்திய அணியில் பேட்டிங் கீழ் வரிசையில் வீரர்கள் சொதப்புகிறார்கள். முதலில் 430 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோரில் இருந்த இந்திய அணி 471 ரன்களுக்கு அதிக விக்கெட்டுக்களை இழந்தால், இந்திய அணியில் பேட்டிங்கையும் மாற்ற வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்றால் சாய் சுதர்சனையும், கருண் நாயரும் நீக்குவதை தவிர வேறு வழியில்லை. ஆனால், முதல் டெஸ்ட் முடிவடைந்த உடன் இந்த இரண்டு வீரர்களையும் நான் நீக்க மாட்டேன்.
வாஷிங்டன் சுந்தரையும் அணிக்குள் கொண்டு வர நான் முயற்சி செய்வதால், இந்திய அணியின் பேட்டிங் வலுவாக மாறும். அது மட்டுமில்லாமல் பந்துவீச்சில் பல வகையான வீரர்கள் கேப்டன்களுக்கு கிடைப்பார்கள் என்றும் கவாஸ்கர் கூறி இருக்கின்றார்.