சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 25 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் அரசராகக் கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது ரிஷப ராசியில் பயணிக்கும் சூரியன், மே 25ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திலிருந்து வெளியேறி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சந்திரனின் அதிபத்தியத்தில் உள்ள ரோகிணி நட்சத்திரத்திற்குள் சூரியன் வருவதால், இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நான்கு ராசிகளுக்கு தொழில் முன்னேற்றமும், நிதி ஆதாயங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்டகால நிலுவைப் பணிகள் வெற்றியடையும். புதிய தொழில் தொடங்க நல்ல காலம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பரம்பரைச் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும்.
ரிஷப ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். சமூக மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், அவை எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபத்தைத் தரும். ஆரோக்கியமும் ஆற்றலும் சிறக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள். அரசு வேலை அல்லது ஒப்பந்தங்களில் வெற்றி. செல்வாக்கு மிக்கோருடன் உறவு கிடைக்கும். தொழில் சிறக்கும், நிதி நிலை வலுப்பெறும், முதலீடுகளில் நல்ல லாபம் உண்டு.
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த நீண்ட தூரப் பயணங்கள் நிதி ஆதாயம் தரும். பணியிடத்தில் பாராட்டும் தன்னம்பிக்கையும் பெருகும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள், வருமான உயர்வு, செல்வச் சேமிப்பு எனப் பல நன்மைகள் உண்டு.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.)
