3ஆவது போட்டியில் அந்த திட்டத்தை வைத்திருந்தும் இந்தியா படுதோல்வி: காரணம் என்ன?

முதல் போட்டி டிரா செய்த நிலையில், அடுத்த போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சொதப்பியது.


3ஆவது போட்டியில் அந்த திட்டத்தை வைத்திருந்தும் இந்தியா படுதோல்வி: காரணம் என்ன?

இலங்கை சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி டிரா செய்த நிலையில், அடுத்த போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சொதப்பியது.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கியது. இப்போட்டியிலும் டாஸை இழந்த இந்தியா, முதலில் பந்துவீசியது. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், இலங்கை பேட்டர்கள் அபாரமாக செயல்பட்டனர்.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், முதல் மூன்று பேட்டர்களும் சிறப்பாக செயல்பட்டனர். பதும் நிஷங்கா 45 (65) ரன்களை அடித்த நிலையில், அவிக்‌ஷா பெர்ணாண்டோ 96 (102) சதத்தை மிஸ் செய்தார். குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.

கேப்டன் அசலங்கா 10 (12), சமரவிக்ரமா 0 (1) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 23 (19) ரன்களை எடுத்தார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 248/7 ரன்களை எடுக்க முடிந்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 35 (20), வாஷிங்டன் சுந்தர் 30 (25) ஆகியோர் மட்டுமே 30+ ரன்களை அடித்தனர். ஷுப்மன் கில் 6 (14), விராட் கோலி 20 (18), ரிஷப் பந்த் 6 (9), ஷ்ரேயஸ் ஐயர் 8 (7) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.

ஆல்-ரவண்டர்கள் அக்சர் படேல் 2 (9), ரியான் பராக் 15 (13) போன்றவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர்களும் படுமோசமாக சொதப்பியதால், இந்திய அணி 26.1 ஓவர்கள் முடிவில் 138/10 ரன்களை மட்டும் சேர்த்து, 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்திய அணி கடைசியாக 1997ஆம் ஆண்டில்தான், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. அதன்பிறகு, தற்போதுதான் இழந்திருக்கிறது. அப்போதும், ஸ்பின்னர்கள்தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தற்போதும், இலங்கை ஸ்பின்னர்கள்தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு திட்டத்தை கையில் எடுத்தது. ஆம், ஒரு பேட்டர் அடித்து ஆட, மற்றொரு பேட்டர் நிதானமாக ஆடி வந்தனர். ஆனால், அதிரடியாக ஆட முற்பட்ட பேட்டர்கள் ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரியான் பராக் போன்ற பேட்டர்கள் சொதப்பி ஆட்டமிழந்தனர். 

இதனால்தான், அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அதிரடி காட்ட முயன்ற இவர்களில் ஒருவர் பெரிய ஸ்கோர் அடித்திருந்தாலே, இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்காது எனக் கருதப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google