கேப்டன்சியை மீண்டும் நிரூபித்த ரோகித் சர்மா.. புதிய தலைவலியில் பிசிசிஐ!

தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை சமன் செய்து கேப்டன் ரோகித் சர்மா வரலாறு படைத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
 கேப்டன்சியை மீண்டும் நிரூபித்த ரோகித் சர்மா.. புதிய தலைவலியில் பிசிசிஐ!

தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை சமன் செய்து கேப்டன் ரோகித் சர்மா வரலாறு படைத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. எனினும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 36 வயதாகும் ரோகித் சர்மா, ஏற்கனவே தோல்வியை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் 2022ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை.

இதனால், எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சொதப்பினால், அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்தது.

ஆனால் முதல் போட்டியில் செய்த தவறுகளில் இருந்து உடனடியாக பாடம் கற்று கேப்டன்சியில் மீண்டும் எழுந்துள்ளார் ரோகித் சர்மா. 

இதனால்,  இந்திய மண்ணில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றால், 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர