விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன் - ரோஹித் சர்மா!

Key Points
  • ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 
விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன் - ரோஹித் சர்மா!

ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் டேவிட் வார்னர் 41 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 46 (71) ரன்களும் எடுக்க பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் களையும் சாய்த்தனர். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஹேசல்வுட், ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 2/3 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்ற திண்டாடிய இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆடரில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். 

நேரம் செல்ல செல்ல நம்புறமாக செயல்பட்ட இந்த ஜோடியில் விராட் கோலி 85 ரன்களும், கேல் ராகுல் 97 ரன்களும் எடுத்து 41.2 ஓவரிலேயே இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி அசாத்தியமான வெற்றி காண வைத்தனர்.

இந்நிலையில் இந்நிலையில் மோசமான துவக்கத்தை பதற்றமடைந்ததாக கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் காப்பாற்றிய ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஆரம்பத்தில் சரிந்தும் வெற்றி கண்டது ஆவலை கொடுத்துள்ளது. உலக கோப்பையின் துவக்கத்திலேயே இது எங்களுக்கு நல்ல போட்டியாக இருந்தது.

குறிப்பாக வெப்பமான சூழ்நிலையில் அனைவரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்து இந்த வெற்றி அபாரமானது. மேலும் எங்களுடைய பவுலர்கள் சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி ஒன்றாக சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

ஆனால் நான் ஆரம்பத்திலேயே அவுட்டானதும் பதற்றமடைந்து விட்டேன். ஏனெனில் நீங்கள் இது போன்ற தொடக்கத்தை விரும்ப மாட்டீர்கள். எனவே நீங்கள் ஆஸ்திரேலியாவின் பவுலர்களுக்கு பாராட்டுகளை கொடுக்க வேண்டும்.

இது போன்ற சிறிய இலக்கை கட்டுப்படுத்த நீங்கள் பவர் பிளேவில் நிறைய விக்கெட் எடுக்க வேண்டும். இருப்பினும் ராகுல் மற்றும் விராட் ஆகியோருக்கு நீங்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும். 

குறிப்பாக அவர்கள் சேசிங் செய்த விதத்திற்கு தலை வணங்குகிறேன். இப்படி பல்வேறு வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவதே எங்களுக்கு காத்திருக்கும் சவாலாகும்” என்று கூறியுள்ளார். 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google