ஜிம்பாப்வே மீது வெற்றி… ஆனாலும் சோகத்தில் இந்திய அணி: ரிங்கு சிங்குக்கு ஏற்பட்ட நிலை!
மும்பையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியின் பின்னணியில், இந்திய வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். காரணம், அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங்கின் தந்தை காலமான செய்தி.
மும்பையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியின் பின்னணியில், இந்திய வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். காரணம், அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங்கின் தந்தை காலமான செய்தி.
போட்டிக்கு முன்பாகவே தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், ரிங்கு சிங் திடீரென நொய்டாவிற்கு சென்று அவரை பார்த்துவிட்டு மீண்டும் அணியுடன் இணைந்தார். அதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு இறுதி ஒருவராக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும், மைதானத்தில் ஃபீல்டிங்கில் தனது பங்களிப்பை வழங்கினார்.
போட்டி முடிந்த பின், இன்று காலை அவரது தந்தை கன்சந்த் சிங் காலமானதாக தகவல் வந்தது. கடந்த சில மாதங்களாக அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அலிகாரிலிருந்து மேல்சிகிச்சைக்காக நொய்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனால் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், தந்தையை பார்க்க ஒருநாள் விடுப்பு பெற்று சென்றிருந்தார். பின்னர் அணியுடன் மீண்டும் இணைந்த நிலையில், இப்படியொரு துயரச் செய்தி அவரை வந்தடைந்துள்ளது. இதையடுத்து இறுதி சடங்கில் பங்கேற்க அவர் உடனடியாக புறப்பட்டுள்ளார்.
அண்மையில் ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலும் அவரது தந்தை உடல்நலக்குறைவால் அதிகமாக கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் ரிங்கு சிங்கிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றியிலும் சோகத்தின் நிழல் படிந்திருக்கிறது.
