முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக ஜடேஜா செய்த செயல்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஐபிஎலில் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக பவர் பிளேவில் விளையாடி இருக்கிறார். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக ஜடேஜா செய்த செயல்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

சில தினங்களுக்கு முன், லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில், சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னோ அணி கடைசிவரை போராடி, வெற்றியைப் பெற்றது. அதற்கு பழிவாங்க சரியான வாய்ப்பாக இது இருக்கிறது.

ராசின் ரவீந்திரா நீக்கப்பட்டதால், ரஹானே, ருதுராஜ் ஆகியோர் ஓபனர்களாக இருந்தனர். ரஹானே வழக்கம்போல சொதப்பி, 3 பந்தில் ஒரு ரன்னை மட்டும் எடுத்து நடையைக் கட்டினார்.

இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செல் 10 பந்துகளில் 11 ரன்னைதான் அடித்தார். தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜாவும் படுமோசமாக சொதப்பி 19 பந்துகளில் 16 ரன்களை தான் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இதனால், ஒரு கட்டத்தில் 180 ரன்களைதான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை, 200+ ரன்களை நோக்கி நகர ஆரம்பித்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட், 60 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 108 ரன்களை குவித்து அசத்தினார். மறுபக்கம், ஷிவம் துபே 27 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்களை விளாசினார்.

முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட மகேந்திரசிங் தோனி, அதில் பவுண்டரி அடித்து அசத்தினார். இப்படி, கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால், சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 210/4 ரன்களை குவித்து அசத்தியது.

ஐபிஎலில் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக பவர் பிளேவில் விளையாடி இருக்கிறார். 

இத்தனை வருடங்கள் விளையாடி, தற்போதுதான் பவர் பிளேவில் ஆடியிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.