கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

நீதிகோரிய இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

May 8, 2025 - 12:20
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி , கொழும்பில் இன்று (08) காலை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நீதிகோரிய இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் ஆரம்பமான போராட்ட பேரணி, அங்குள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர், கொட்டாஞ்சேனை கல்பொக்க சந்தியில் அமைந்துள்ள சிறுமியின் வீட்டிற்கு பேரணியாக சென்று அங்கு பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டதுடன், மாணவிக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

கொழும்பில் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!