மும்பையில் நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் – மதுபோதைய துரத்திய நபர்கள்!

மும்பையில் நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் – மதுபோதைய துரத்திய நபர்கள்!

மும்பையில் அதிகாலை நேரத்தில் நடந்த சாலை மிரட்டல் சம்பவம் ஒன்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் Nimisha Nair. தனது சமூக வலைத்தளப் பதிவில், பாந்த்ரா கிழக்கு பகுதியில் உபேர் காரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பதற்றமான அனுபவத்தை அவர் விவரித்துள்ளார். அவர் சென்ற கார் ஒரு ஸ்கூட்டரை முந்திச் சென்றதைத் தொடர்ந்து, அதில் இருந்த இருவர் கடும் கோபத்தில் காரை துரத்தியதாக கூறப்படுகிறது.

அந்த இருவரும் மதுபோதையில் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். அதிகாலை சுமார் 4:50 மணியளவில் கேர்வாடி ப்ளைஓவர் அருகே, அவர்கள் காரை முற்றிலும் தடுத்து நிறுத்தியதாக பதிவு குறிப்பிடுகிறது.

பரபரப்பான சாலையிலேயே அவர்கள் டிரைவரை மிரட்டியதுடன், காரின் கதவுகளை பலவந்தமாகத் திறக்க முயன்றதாகவும், ஜன்னலை திறக்க அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவத்தின் போது பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்ததாகவும், டிரைவரை தாக்கும் முயற்சி தெளிவாக தெரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு இருந்த பலர் இதை பார்த்துக்கொண்டிருந்த போதும், யாரும் தலையிடவில்லை என்பதும் கவலைக்குரிய அம்சமாகும்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததை கவனித்த அந்த நபர்கள், காரின் புகைப்படத்தை எடுத்துவிட்டு அங்கிருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை காவல்துறையை டேக் செய்து வெளியிடப்பட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.