பிரித்தானியாவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை
பிரித்தானியாவில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
சமூக நீதி மையம் (Centre for Social Justice – CSJ) வெளியிட்ட இந்த பகுப்பாய்வில், ஆய்வில் பங்கேற்ற 10 பெற்றோரில் 4 பேர், தங்கள் குழந்தைகள் குறைந்தது ஒரு சமூக ஊடக தளத்தையாவது பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.
இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
READ ALSO:
ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை சிக்கல்: தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பில் பரிசீலனை
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்துமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
