இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடர்... ரோகித் அணிக்கு ஆப்பு வைத்துள்ள அட்டவணை!

இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்றுதான் ஆஸ்திரேலியா அணி இந்த இரண்டு சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடர்... ரோகித் அணிக்கு ஆப்பு வைத்துள்ள அட்டவணை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஐந்து முறையாக இந்தியாவின் வசம் இருக்கின்ற நிலையில், இம்முறை இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாள் வரும் பாக்சிங் டேட் டெஸ்ட், மற்றும் புத்தாண்டு டெஸ்ட் என, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கின்றது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன் ஆகியவற்றை தன்வசப்படுத்தி பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி உள்ளது.

இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்றுதான் ஆஸ்திரேலியா அணி இந்த இரண்டு சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறது. 

ஆனாலும், தங்களது சொந்த நாட்டில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்ததை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், இந்த முறை ஆஸ்திரேலியா வரும் இந்திய அணியை உள்நாட்டில் வைத்து எப்படியாவது தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இதற்கான அட்டவணையை தயாரித்திருக்கிறார்கள். 

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை கடினமாக மாற்றுவதன் மூலம், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என அவர்கள் எண்ணியுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் உலகின் அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை அடிலைட் மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாகவும் நடத்த அட்டவணையை தயாரித்து உள்ளார்கள்.

ஆஸ்திரேலியா அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தோற்றதே கிடையாது என்ற நிலையில், சுழல் பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கக் கூடிய சிட்னி மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டியை நடத்துகிறார்கள். 

இப்படி இந்திய அணிக்கு எதிராக வியூகத்தை அட்டவணையை வைத்தே தயாரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

  • நவம்பர் – 22 – 26 - பெர்த்
  • டிசம்பர் – 6 – 10 - அடிலைட்
  • டிசம்பர் – 14 – 18 - பிரிஸ்பேன்
  • டிசம்பர் – 26 – 30 - மெல்போன்
  • ஜனவரி 2025 – 3 – 7 - சிட்னி

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர