இறுதிப்போட்டியில் மழை பெய்யுமா?... ரிசர்வ் டே விதிமுறை என்ன? 

இப்போட்டியானது அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், வானிலை எப்படி இருக்கும், ரிசர்வ் டே விதிமுறை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
இறுதிப்போட்டியில் மழை பெய்யுமா?... ரிசர்வ் டே விதிமுறை என்ன? 

உலகக் கோப்பை 2023 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன. 

இப்போட்டியானது அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், வானிலை எப்படி இருக்கும், ரிசர்வ் டே விதிமுறை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இறுதிப் போட்டி நடைபெறும் நாளை, வானிலை மிகவும் சிறப்பாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. போட்டி துவங்கும்போது வெளியில் 32 டிகிரி இருக்கும் என்றும், இரவு நேரத்தில் 23 டிரிகி வரை செல்லும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம், பகலில் பந்துகள் அபாரமாக சுழல வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்படுவதால், முதலில் களமிறங்கிய பெரிய ஸ்கோர் அடிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை பெய்தால், போட்டியானது ரிசர்வ் டே வரை செல்லும். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸ் 20 ஓவர்களை கடந்துவிட்டால், ஆட்டம் ரிசர்வ் டே-வுக்கு செல்லாது. DLS விதிமுறைப்படி வெற்றி, தோல்வி அறிவிக்கப்படும். 

ஒருவேளை ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்று, சூப்பர் ஓவரும் டிரா ஆனால், அதிக பவுண்டரி அடிப்படையில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது. சூப்பர் ஓவர் டிரா ஆனால், மேலும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும். மீண்டும் டிரா ஆனால், மீண்டும் சூப்பர் ஓவர்தான்.

கடந்த சில ஐசிசி தொடர்களில் இந்தியா சொதப்ப முக்கிய காரணம் அழுத்தங்கள்தான். அழுத்தங்களுடன் விளையாடி இந்தியா சொதப்பி வந்தது. ஆனால், தற்போது உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி விளையாடும் விதம், மற்ற அணிகளுக்குத்தான் அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. 

இதனால், இந்தியாவுக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டதாகதான் கருதப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சுமாராகத்தான் இருக்கிறது. 
பந்துவீச்சில்கூட, பவர் பிளேவுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கிடையாது. இதனால், இந்திய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர