சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யுத்த சூழ்நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் எனவும் அது தவறான நடவடிக்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இரண்டு இலங்கை பெண்கள் எல்லையை கடந்து இஸ்ரேலுக்கு செல்ல முயன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.