கோலிக்கு ஒரு சாம்பியன் கிண்ணத்தை வெற்றி பெற்று கொடுக்கனும்; ஆசையை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் வீரர் !!

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான நஜிபுல்லாஹ் ஜார்டன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
கோலிக்கு ஒரு சாம்பியன் கிண்ணத்தை வெற்றி பெற்று கொடுக்கனும்; ஆசையை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் வீரர் !!

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான நஜிபுல்லாஹ் ஜார்டன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்புவதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான நஜிபுல்லாஹ் ஜார்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நஜிபுல்லாஹ் ஜார்டன் பேசுகையில், “இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் கனவாக தான் இருக்கும். 

எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவு உள்ளது. ஐபிஎல் தொடரில் நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்புகிறேன். 

விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இல்லை, ஆனால் இந்த முறை பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் என நான் நம்புகிறேன்”என்று தெரிவித்தார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர