2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இம்முறை மொத்தமாக 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக சரிபார்த்துக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.