இலங்கை அருகே அமெரிக்கா அதிரடி: ஈரானியப் போர்க்கப்பல் தகர்ப்பு - 80 பேர் பலி; 35 பேர் மீட்பு!
இந்தியப் பெருங்கடலில் சர்வதேச நீர்ப்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்கா தனது டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்
இலங்கையின் காலி (Galle) துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் சர்வதேச நீர்ப்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்கா தனது டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார். "பாதுகாப்பானது என்று ஈரானியத் தரப்பு நினைத்த போர்க்கப்பலை அமெரிக்கா வெற்றிகரமாகத் தகர்த்துள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான அந்தக் கப்பலில் இருந்து சுமார் 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காகக் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தற்போது இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பரவியிருப்பது தெற்காசிய நாடுகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
