முதல் 6 இடங்கள் இனி இவர்களுக்கே.... புது வீரர்கள் தேர்வு.. அணி மீட்டிங்கில் தோனி அதிரடி அறிவிப்பு! 

Key Points
  • நடப்பு ஐபிஎல் 18ஆவது சீசனில், முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்...
முதல் 6 இடங்கள் இனி இவர்களுக்கே.... புது வீரர்கள் தேர்வு.. அணி மீட்டிங்கில் தோனி அதிரடி அறிவிப்பு! 

நடப்பு ஐபிஎல் 18ஆவது சீசனில், முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன்,  புது வீரர்களை உள்ளே கொண்டுவந்து, பேட்டிங் வரிசையை தோனி பலப்படுத்த உள்ளார்.

ஐபிஎல் 18ஆவது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். எதிர்பார்த்ததைவிட, பவர் பிளேவில் கலீல் அகமது தொடர்ந்து மிரட்டலாக பந்துவீசி வருகிறார். 

மேலும், நூர் அகமது அன்ஷுல் கம்போஜ், பதிரனா, ஜடேஜா போன்றவர்களும் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால், பேட்டிங் பெரும் பிரச்சினையாக உள்ளது

இந்த நிலையில், ஷேக் ரஷித் இனி ஓபனராக ஆட மாட்டார் என்றும், அவருக்கு மாற்றாக ஓபனர் இடத்தில் மற்றுமொரு வீரர் ஆடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளதுடன், ஷேக் ரஷித்திற்கு இனி ஒன்டவுன் இடம்தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்றப் பிறகு பேட்டிகொடுத்த மகேந்திரசிங் தோனி, அணியில் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பேட்டிங் சரியில்லை. அதனை சரிசெய்யும் வேலையை விரைவில் துவங்குவோம் எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், தற்போது புது பேட்டிங் வரிசையை தோனி தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்றாக இணைந்துள்ள ஆயுஷ் மாத்ரேவுக்கு ஓபனர் வாய்ப்பை கொடுக்கப்பட உள்ளதாம்.

சிஎஸ்கே அணி, தனது அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வான்கடேவில் எதிர்கொள்ள உள்ள நிலையில், ஆயுஷ் மாத்ரேவும் மும்பையை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஓபனராக வாய்ப்பு கொடுத்தால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளத.

மூன்றாவது இடத்தில் ஷேக் ரஷித்தும், 4ஆவது இடத்தில் ஷிவம் துபேவும் ஆடுவார்கள். தொடர்ந்து 5 மற்றும் 6ஆவது இடங்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இருப்பார்கள் என்றும், இந்த பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அணி மீட்டிங்கில் தோனி இதனை அறிவித்த நிலையில், வீரர்கள் அனைவரும் தங்களது இடங்களுக்கு ஏற்ப பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்துளார்களாம். 

குறிப்பாக, முதல் மூன்று பேட்டர்கள் தொடர்ந்து அதிரடியான ஷாட்களை ஆடி பயிற்சி மேற்கொண்டு வருவதால், இனி பவர் பிளேவில் சிஎஸ்கே அதிக ரன்களை குவிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google