அஸ்வின் உள்ளிட்ட இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்... தோனி அதிரடி முடிவு: தமிழக வீரர் அறிமுகம்!

Key Points
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து வரும் 7 போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அஸ்வின் உள்ளிட்ட இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்... தோனி அதிரடி முடிவு: தமிழக வீரர் அறிமுகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டும் பெற்றுள்ளதால், அடுத்து வரும் 7 போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேசுகையில், அணியின் பந்துவீச்சு துறையில் எந்த குறையும் இல்லை. அணியின் பேட்டிங் வரிசைதான் பிரச்சினையாக உள்ளது என்றார்.

அதனால், அடுத்த போட்டிக்குள் இந்த பிரச்சினையை சரி செய்வோம் என்றும் மகேந்திரசிங் தோனி கூறி இருந்தார்.

முக்கியமாக, பவர் பிளேவில் தொடர்ந்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி வருகிறது. இதனை சரிசெய்தால் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக செயல்பட முடியும். 

இந்த நிலையில், இந்த பிரச்சினையை இளம் வீரர்களை வைத்து சமாளிக்க தோனி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்றாக வந்துள்ள, ஆயுஷ் மாத்ரேவுக்கு ஓபனர் இடத்தை கொடுக்க உள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருந்து திரிபாதியை நீக்கிவிட்டு, ஷேக் ரஷித்தை ஆட வைக்கவும் தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், விஜய் சங்கரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில், தமிழகத்தை சேர்ந்த இளம் புதுமுக வீரர் ஆண்ட்ரே சித்தார்த்தை கொண்டுவரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

சமீப காலமாக மதிச பதிரனா சொதப்பி வருவதுடன், டெத் ஓவர்களில் இவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருவதால், நாதன் எல்லிஸை மீண்டும் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, வரும் 20ஆம் தேதி வான்கடேவில் எதிர்கொள்ள இருக்கின்றது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google