கடப்பாரை டீமாக மாறிய சென்னை அணி... 2026 IPLக்கு அதிரடி படையை தயார் செய்த தோனி!
2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், Chennai Super Kings அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். கடந்த சீசனில் ஏற்பட்ட ஏமாற்றங்களை மறந்து, இந்த முறை முழுக்க புதிய அணுகுமுறையுடன் ‘கடப்பாரை’ போல அதிரடி அணியை கட்டியமைத்துள்ளது CSK நிர்வாகம்.
அனுபவம் வாய்ந்த வீரர்களும், இளம் திறமையாளர்களும் இணைந்த இந்த கூட்டணி, கோப்பை வெற்றியை இலக்காகக் கொண்டு தயாராகியுள்ளது.
இந்த சீசனில் அணியின் முக்கிய பலமாக Sanju Samson பார்க்கப்படுகிறார். கேப்டன் Ruturaj Gaikwad அணியை நிலைநிறுத்தும் பங்கில் இருக்கும் நிலையில், சாம்சனின் அதிரடி தொடக்கம் அணிக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவும் டாப் ஆர்டரை வலுப்படுத்த, இந்த கூட்டணி பவர்பிளே ஓவர்களில் எதிரணிக்கு சவால் விடும் வகையில் உள்ளது.
ஏலத்தில் CSK எடுத்த முடிவுகள் பெரும் கவனம் ஈர்த்தன. இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோருக்கு அதிக தொகை செலவிட்டு அணியில் சேர்த்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
குறிப்பாக, எதிர்காலத்தில் MS Dhoniயின் இடத்தை நிரப்பும் வீரராக கார்த்திக் சர்மா பார்க்கப்படுகிறார். அதேபோல், பிரசாந்த் வீர் ஆல்-ரவுண்டர் திறமையால் அணிக்கு சமநிலை தரக்கூடியவர்.
நடுத்தர வரிசையில் Dewald Brevis மற்றும் Shivam Dube ஆகியோர் அணிக்கு அதிரடி சக்தியாக உள்ளனர். பந்துவீச்சில் நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் அணியை வலுப்படுத்துகின்றனர்.
அனுபவமும் இளமையும் கலந்த இந்த CSK அணி, கடந்த ஆண்டின் தோல்விகளை மறந்து இந்த முறை கோப்பையை கைப்பற்ற உறுதியுடன் களமிறங்குகிறது.
