அஸ்வெசும பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கைநிறையப் பணம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! ஏப்ரல் மாத விசேட நிவாரணம் குறித்த முழு விபரங்கள் உள்ளே.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
அஸ்வெசும பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கைநிறையப் பணம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை இந்த ஏப்ரல் மாதத்திற்காக மாத்திரம் விசேடமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுமக்களின் தற்போதைய வாழ்வாதாரச் செலவினங்களையும் பண்டிகைக் காலத்தையும் கருத்திற்கொண்டு இந்த விசேட நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். இந்த திடீர் அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள பல இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் புதிய அறிவிப்பின்படி, இதுவரை 17,500 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுத் தொகை தற்போது 25,000 ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 10,000 ரூபாயினைப் பெற்று வந்த பயனாளர்களுக்கு இனி 15,000 ரூபாயும், 5,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்று வந்தவர்களுக்கு 7,500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் தொகை உயர்வு காரணமாக அஸ்வெசும திட்டத்தின் கீழ் உதவி பெறும் அனைத்துக் குடும்பங்களும் இந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுதல் தொகையைத் தங்களது வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விசேட நிவாரணத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, அரசாங்கம் இந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், ஏழை எளிய மக்களின் பண்டிகைக் கால மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தக் கொடுப்பனவு அதிகரிப்பானது இந்த ஏப்ரல் மாதத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால், பயனாளர்கள் இதனைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர