இங்கிலாந்தில் சொதப்பிய கம்பீர்... அவரை நம்பி களமிறங்கும் இந்திய அணி! ரசிகர்கள் கோரிக்கை!

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் ஒன்பது சதம், 22 அரை சதம் அடங்களாக 4154 ரன்கள் அடித்திருக்கிறார்.

09 Jun 2025, 01:04 PM
2 நிமிடம் வாசிப்பு

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
இங்கிலாந்தில் சொதப்பிய கம்பீர்... அவரை நம்பி களமிறங்கும் இந்திய அணி! ரசிகர்கள் கோரிக்கை!

இந்திய அணியானது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக  இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது.  விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அதிகளவில் அனுபவம் இல்லாத வீரர்கள் தான் தற்போது இந்திய அணியில் உள்ளனர்.

அவர்களில் கே எல் ராகுல், கில், ரிஷப் பண்ட் ஆகியோர்களை நம்பி தான் இந்திய அணியின் பேட்டிங் உள்ளதுடன், ஜெய்ஸ்வால், கருண் நாயர் ஆகியோர் தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி போன்ற வீரர்கள் வெளிநாட்டு மண்களில் நன்றாக விளையாடிய திறனை கொண்டவர்கள் என்ற நிலையில், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் அனைத்தும் இந்திய மண்ணில் செய்யப்பட்டவை.

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் ஒன்பது சதம், 22 அரை சதம் அடங்களாக 4154 ரன்கள் அடித்திருக்கிறார். அத்துடன், கம்பீர் இங்கிலாந்து மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ் ஆடி127 தான் அடித்து உள்ளார்.

அதிலும், அவர் அதிகபட்சமாக 38 ரன்கள் அடித்து இருக்கின்றார். இதனால், அவரது சராசரி வெறும் 12 என்ற அளவிலே  உள்ளதுடன், ஆஸ்திரேலிய மண்ணிலும் கம்பீர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 181 ரன்கள் தான் அடித்து இருந்தார்.

கம்பீர் பயிற்சியாளராக வந்த பின்னர் ஆஸ்திரேலியாவில் அடி வாங்கிய இந்திய அணி, தற்போது இங்கிலாந்துக்கு அவரை நம்பியே புறப்படுகின்றது.

இந்த நிலையில், துடுப்பாட்ட நுணுக்கங்கள் தெரிந்த ஒரு பயிற்சியாளர் இந்திய அணிக்காக, இங்கிலாந்து தொடரில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW